எங்கள் அணி

திரு.கிஹான் பிலபிடிய

இலங்கை பொது நம்பிக்கைப் பொறுப்பாளர்.

திரு. கிஹான் பிலபிடிய அவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டமானி (டுடு.டீ) பட்டதாரியாவார். 1998 ஆம் ஆண்டில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட இவர் 1999 ஆம் ஆண்டு தொடக்கம் அரச சட்டத்தரணியாக நான்கு ஆண்டுகள் (1999 – 2003) நேரடியாக சட்டமா அதிபர் திணைக்களத்துடன் தொடர்புபட்டு இருந்தார். பின்னர் 2003 ஜனவரி மாதம் தொடக்கம் மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதியாக இணைந்து கொண்ட இவர் மாவட்ட நீதிபதி பதவியிற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார். அதற்குப் பின்னர் திரு கிஹான் பிலபிடிய அவர்கள் கண்டி அபிலிபிட்டிவைப் போன்று குளியாப்பிட்டி மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதுடன், அவர் சட்டத்தரணியாக (சட்டமா அதிபர் திணைக்களத்தில்) நீதிமன்றத்தில் 20 வருடங்களுக்கு மேற்பட்ட சேவைக்காலங்களைப் பூர்த்தி செய்துள்ளார். அதற்குப் பின்னர் இவர் இலங்கையின் பொது நம்பிக்கைப் பொறுப்பாளராக தற்போது கடமையாற்றுகின்றார்.

திருமதி. ஜீ.பீ. கறவிட

பிரதிப் பொது நம்பிக்கை பொறுப்பாளர்

திருமதி. ஜீ.பீ. கறவிட அவர்கள் சிரேஸ்ட சட்டத்தரணி என்பதுடன்; 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் அப்போதைய நீதி அமைச்சின் பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தின் பிரதிப் பொது நம்பிக்கை பொறுப்பாளர் பதவியிற்கு நியமிக்கப்பட்டார். திரு கறவிட அவர்கள் ஐக்கிய அரபு எமிர் இராச்சியத்தின் ழுநெஒ குருப் ஒப் கம்பனியின் ஒருவெல அதுறுகிரிய இலங்கை இறும்புக் கூட்டுத்தானத்தின் மானித வள சட்ட முகாமையாளராக சிரேஸ்ட பதவியினை வகித்துள்ளதுடன் அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட சட்டமானி (டுடுடீ) பட்டம் பெற்றுள்ளார். தற்போது புத்தசாசன சமய விவகார மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் கீழ் பிரதி பொது நம்பிக்கை பொறுப்பாளராக கடமையாற்றுகின்றார்.

திரு. கே.டி.பீ.டி. கருணாரத்ன

பிரதிப் பொது நம்பிக்கை பொறுப்பாளர்

திரு. கே.டி.பீ.டி. கருணாரத்ன அவர்கள் பொது நம்பிக்கைப் பொறுப்பளார் திணைக்களத்தின் பிரதி பொது நம்பிக்கைப் பொறுப்பாளராக 2017 ஆம் ஆண்டு தொடக்கம் கடமையாற்றுவதுடன் அப் போதைய நிதி அமைச்சின் கீழ் அவர் அப் பதவியிற்கு நியமிக்கப்பட்டுள்ளார். சிரேஸ்ட சட்டத்தரணியான இவர் தற்போது புத்தசாசன, சமய விவகார அமைச்சின் கீழ் பிரதி பொது நம்பிக்கை பொறுப்பாளாராக கடமையாற்றுகின்றார். திரு கருணாரத்ன அவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைமானிப் பட்டதாரியாவார்.