வெளிநாட்டு இழப்பீடு
வெளிநாடுகளில் பணிபுரியும் போது உயிரிழந்த அல்லது அங்கவீனமுற்ற இலங்கையர்களுக்காகக் கிடைக்கும் இழப்பீட்டுத் தொகை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாக பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்திற்கு அனுப்பப்படும்.
விகாரை இழப்பீடு
1944 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க விகாரை காணி இழப்பீட்டுக் கட்டளைச் சட்டத்துக்கு அமைய வழிபாட்டிடங்களுக்குச் சொந்தமான காணி நிலங்கள் அரச கருமங்களுக்காக கையகப்படுத்தப்படும்போது வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையானது இத்திணைக்களத்தில் வைப்பிலிடப்படுவதுடன், பௌத்த விவகார ஆணையாளர் நாயகத்தின் அனுமதியின் அடிப்படையில் விடுவிக்கப்படும்.
தனிநபர் நம்பிக்கைப் பொறுப்பு உதவிகள்
திணைக்களத்தில் நிறுவப்பட்டுள்ள நம்பிக்கைப் பொறுப்புகள் மற்றும் இறுதி விருப்பாவணங்கள் ஊடாக மரணச் சொத்துக்களின் நிறைவேற்றுனராக பொதுநம்பிக்கைப் பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ள மரணச் சொத்துக்களில் பயனாளிகள் குறித்து பகுதியளவில் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ள நம்பிக்கைப் பொறுப்புகள் மற்றும் மரணச் சொத்துகளுடன் தொடர்புடைய குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கும், பொதுவான நோக்கங்கள் அல்லாத தனிப்பட்ட நோக்கங்களை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட நம்பிக்கைப் பொறுப்பு இதுவாகும்.